""சூடா டீ போட்டுத் தரவா?''
""வேண்டாம்மா....''
""ஏன்?''
""டீ குடிச்சுட்டுப் படின்னு மிரட்டுவே.... அதனாலதான்!''
ஏ.நாகராஜன்,
பம்மல்.
""மவுசுக்கும், கம்ப்யூட்டர் மவுசுக்கும், என்ன வித்தியாசம்?''
""நீயே சொல்லு!'
""மவுசுக்கு வால் பின்னாடி இருக்கும்!.... கம்ப்யூட்டர் மவுசுக்கு வால் முன்னாடி இருக்கும்!''
உமர்,
கடையநல்லூர்.
""நீ குதிரை வண்டியிலே ஏறிப் பார்த்திருக்கியா?''
""குதிரை எப்படிடா வண்டியிலே ஏறும்?''
மு . பெரியசாமி,
திருத்துறைப்பூண்டி - 614715
""நாய்க்கு நாம பேசறது தெரியுமாடா?''
""எனக்குத் தெரியாதுடா!''
""நாய்க்குத் தெரியுமான்னுதான் கேட்டேன்!''
வி.ரேவதி,
தஞ்சாவூர் - 613007
""உன் கடிகாரத்திலே என்ன டைம்?''
""பத்து பத்து!''
""ஒரு தடவை சொன்னா போதும்டா''
கே. இந்து குமரப்பன்,
விழுப்புரம் - 605602.
""அந்த அங்கிளுக்கு செல்வாக்கு ஜாஸ்தி!''
""எப்படி?''
""செல்லுலே பேசிக்கிட்டே வாக்கிங்க போவாரு!''
இரா.கிருத்திக் குமார்,
நெய்வேலி - 607803