புத்திசாலி மனிதன்

​மாலை நேரம் காட்டு வழியேமனிதன் ஒருவன் வந்தான்பசி தீர்க்கும் பழம் தேடி
புத்திசாலி மனிதன்
Updated on
1 min read


மாலை நேரம் காட்டு வழியே
மனிதன் ஒருவன் வந்தான்
பசி தீர்க்கும் பழம் தேடி
அங்கும் இங்கும் அலைந்தான்

உச்சிக் கிளையில் பழுத்தப் பழங்கள்
வாவா என்று அழைத்தன
கிளைகளில் தாவும் குரங்குகள் அவனைப்
பார்த்துப் பார்த்துச் சிரித்தன

கனிந்த பழங்கள் மர உச்சியிலே
பறிக்க அவனால் முடியவில்லை
புத்திசாலி மனிதன் மனதில் நல்ல 
உபாயம் ஒன்று எட்டியது

சிறுகற்கள் தேடி எடுத்து வந்தான்
குரங்குகள் நோக்கி எறிந்தான்
கோபம் கொண்ட குரங்குகள் பழங்களை
எடுத்தெறிந்தது அவன் மீது

எறிந்த பழத்தை எடுத்த மனிதன்
புசித்தான் தன் பசிதீர
களைப்பு நீங்கி அந்த மனிதன் 
நடந்தான் தன் வழிமேலே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com