""டேய், எ, பி. சி, டி, தலைகீழா சொல்லச் சொன்னேன்..... அதுக்குன்னு இப்படியா?''
கே. இந்துகுமரப்பன்,
விழுப்புரம்.
""வா சாப்பிடப் போலாம்!....''
""இடம் இல்லே!''
""பந்தியிலா இடமில்லே?''
""இல்லே என் தொந்தியிலே!''
வி . ரேவதி,
தஞ்சாவூர்.
""வரிசையிலே கடைசியிலே போய் நிக்கச் சொன்னேனே.... ஏன் போகலே?''
""ஏற்கனெவே யாரோ ஒரு பையன் அங்கே நின்னுக்கிட்டிருக்கானே சார்!''
உமர்
கடையநல்லூர் - 627751.
""என்ன மாலா மவுனமா இருக்கே?''
""இல்லையே, மெளன ராகம் பாடிக்கிட்டிருந்தேன்!''
பி.சி.ரகு,
விழுப்புரம்.
""சூரியனைச் சுற்றும் கோள்கள் பெயரைச் சொல்லு பார்க்கலாம்னு கேட்டா பேசாம இருக்கியே?.... என்ன ஆச்சு உனக்கு?''
""கோள் சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்களே சார்!''
அ . ப . ஜெயபால்,
சிதம்பரம் - 608001.
""சாயங்காலம் மொட்டை மாடியிலேயிருந்து வர்றப்ப அம்மா மூணு வாயில் புடவை வெச்சிருந்தாங்க!''
""கர்சீப்னா பரவாயில்லே..... நம்பலாம்!..... மூணு புடவையை வாயில் வெச்சிருந்தாங்களா?.... நம்பவே முடியலையே!''
மாலாராம்,
அஞ்சல், வடகுத்து - 607308.