வனங்களைக் காப்போம்

மாணவத் தம்பி தங்கைகளேமாசறு தங்கக் கம்பிகளேதேனினும் இனிய செய்திகளைசெவிகளைத் தந்தே கேளுங்கள்
வனங்களைக் காப்போம்
Published on
Updated on
1 min read

மாணவத் தம்பி தங்கைகளே
மாசறு தங்கக் கம்பிகளே
தேனினும் இனிய செய்திகளை
செவிகளைத் தந்தே கேளுங்கள்

கானகம் பறவைகள் விலங்குகளும்
கருத்தாய் இயற்கையைப் பேணிடுமே
ஆன மட்டும் அவையெல்லாம்
அடுத்தவைக் காகவும் வாழ்ந்திடுமே

நாட்டில் மூன்றில் ஒரு பங்கு
நல்ல வனங்களாய் இருக்கணுமே
காட்டு உயிர்கள் வனங்காக்கும்
கட்டுப் பாட்டுடன் தான்வாழும்

பழங்களைத் தின்றே கொட்டைகளை
பறவைகள் விதைத்தே வனம்பெருக்கும்
பழம்காய் விதைகள் கட்டைகளை
பலருக்கும் தரும் மரம் உதவிசெய்யும்

தா...  வரங்கள் என்றாலே
தருமே வரங்கள் தாவரங்கள்
கானக மரங்கள் வாழ்வெல்லாம்
கனிவாய் மனிதர்க் குதவிடுமே

மனிதர்கள் இல்லை என்றாலும்
வனங்கள் தாவரம் இவைவாழும்
இனியநல் பறவைகள் விலங்குகளும்
இயற்கையில் இணைந்தே வாழ்ந்திடுமே

வனங்கள் இல்லா விட்டாலும்
விலங்குகள் பறவைகள் இலைஎனினும்
மனிதர்கள் வாழ்ந்திட முடியாதே
மனதில் சிந்தித்தே செயல்படுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com