அறத்துப்பால் - அதிகாரம் 23 - பாடல் 8
- திருக்குறள்
தன்னலத்தைக் கருதியே
பொருளைச் சேர்க்கும் மனிதர்கள்
எல்லாம் இழந்து வருந்திடும்
நிலையை அடையக்கூடாது
சேர்த்த பொருளைப் பிறருக்கும்
கொடுத்து மகிழத்தெரிந்தவர்
இழந்து வருந்த மாட்டாரே
நிறைந்து மகிழ்ந்து வாழ்வாரே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்