ஈகை

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமைவைத்திழக்கும் வன்க ணவர்.
ஈகை

அறத்துப்பால்   -   அதிகாரம்  23  -   பாடல்  8


ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

- திருக்குறள்


தன்னலத்தைக் கருதியே
பொருளைச் சேர்க்கும் மனிதர்கள்
எல்லாம் இழந்து வருந்திடும்
நிலையை அடையக்கூடாது

சேர்த்த பொருளைப் பிறருக்கும்
கொடுத்து மகிழத்தெரிந்தவர்
இழந்து வருந்த மாட்டாரே
நிறைந்து மகிழ்ந்து வாழ்வாரே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com