லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

ஸ்கூட்டருக்கு இணையாக... அமேசானில் கிடைக்கும் புதிய மின்சார சைக்கிள்!

மின்சார இருசக்கர வாகனத்துக்கு இணையாக மின்சார சைக்கிள் அறிமுகமாகியுள்ளது குறித்து...

EMotorad Brand new Electric cycle

வைபர் மின்சார சைக்கிள் - படம் / நன்றி - இ-மோட்டோராட்

Published On :20 ஏப்ரல் 2026, 5:51 pm IST

இந்தியாவைச் சேர்ந்த இ-மோட்டோராட் நிறுவனம் புதிதாக வைபர் என்ற மின்சார மிதிவண்டியை (சைக்கிள்) அறிமுகம் செய்துள்ளது.

மின்சார இருசக்கர வாகனத்தின் தோற்றத்திற்கு சற்றும் சளைக்காத வகையில், வைபர் சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில், 48 வோல்ட் 250 வாட்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. 20Ah லித்தியம் - அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. சைக்கிளில் இருந்து பேட்டரியை வெளியே எடுத்து, ஏதுவான இடத்தில் வைத்து சார்ஜ் செய்துகொள்ளலாம்.

முன்பக்கம் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், சுமூகமான பயணத்தை உறுதி செய்ய முடியும். இரவில் பாதுகாப்பான பயணத்துக்காக முகப்பு விளக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் விலை ரூ. 66,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளங்களிலும் இந்த சைக்கிள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

EMotorad Brand new Electric cycle price specifications

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.