மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/
News image
Updated On :23 ஏப்ரல் 2022, 12:30 pm

உயர்ந்து விரிந்த ஆலமரம்
ஒன்றாய் பறவைகள் கூடுமிடம்!
வியந்து பார்க்கச் செய்யும்மரம்
விழுதுகள் விட்ட ஆலமரம்!

பவழம் போலே பழம் பழுக்கும்
பார்க்க அழகாய்ப் பளபளக்கும்!
எவரும் தங்க நிழல் கொடுக்கும்
எருது பசுக்கள் ஓய்வெடுக்கும்!

அரசுப் படைகள் வந்து தங்கும்
அடர்ந்த நிழலைக் கொண்டிருக்கும்!
குரங்குக் கூட்டம் ஊஞ்சலாடும்
கிளிகள் கீச்சொலி கேட்டிருக்கும்!

ஊஞ்சல் ஆடி விழுதுகளில்
உள்ளம் களிப்பார் சிறுவர்களே!
ஓய்ந்து பயணக் களைபாற்ற
உதவும் வழியில் ஆலமரம்!

வயது முதிர்ந்த காலத்திலே
வளர்ந்து தாங்கும் விழுதாவீர்
என்றே நமக்குப் போதிக்கும்
இனிய பாடம் ஆலமரம்!

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.