மலையைப் போல ஆல மரமும்
அழகாய்த் தோன்றுதே - அது
தலைக்கு மேலே கிளைகளை விரித்தே
குடைபோல் நிற்குதே!
தன்னை நாடி பறந்தே வந்திடும்
பறவைகள் அனைத்துமே - மேலே
தங்கிக் கொள்ள தனது கிளையில்
இடத்தைச் கொடுக்குதே!
குட்டிக் குட்டியாய் ஆல மரத்தின்
பழங்கள் இருக்குதே!-அவற்றை
கொத்திக் கொத்தி பறவைகள் தின்றே
பசியைப்போக்குதே!
ஆல இலையும் ஆடு தின்ன
உணவாய் ஆகுதே! - பல்லும்
ஆலம் விழுதால் துலக்கி வந்தால்
உறுதி யாகுதே!
சிறுவர் கட்டி ஊஞ்ச லாட
சிறிய விழுதுமே! - தரையில்
பெரிய விழுதும் ஊன்றி நின்றே
மரத்தைத் தாங்குமே!
வாழ்ந்தால் ஆல மரத்தைப் போல
வாழ வேண்டுமே!- நாம்
வாழ்ந்ததைப் பற்றி ஊரார் புகழ்ந்தே
பேச வேண்டுமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக ரூ. 5 லட்சம்! முதல்வர் கலைஞரிடம் விஜய் வழங்கினார்!

சரக்கு விமானப் போக்குவரத்துத் துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

அண்ணா, விரலை வெட்டி அனுப்பவா? ரசிகைக்கு விஜய் அளித்த பதில் என்ன?






