இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

'கடளளின் நாடக மேடை'

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூஸிலாந்து வேல்ஸ் பகுதியில் உள்ள கடற்கரை நகரம்- ஸ்டீபன்ஸ் துறைமுகம். தென் பசிபிக் கடலில் உள்ள கடற்கரை பூமி.

News image
Updated On :11 டிசம்பர் 2022, 12:30 am

ராஜேஸ்வரி

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூஸிலாந்து வேல்ஸ் பகுதியில் உள்ள கடற்கரை நகரம்- ஸ்டீபன்ஸ் துறைமுகம். தென் பசிபிக் கடலில் உள்ள கடற்கரை பூமி. கேப்டன் ஜேம்ஸ் குக் என்பவரால், 1770-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. பூமியில் "கடளளின் நாடக மேடை' என்று இந்தப் பகுதியை அழைக்கின்றனர்.

1790-இல் முதன்முதலாக 5 கைதிகளை இங்கு படகில் அழைத்து வரும் முயற்சி நடைபெற்றது. ஆனால், கரைக்கு வரும் முன் அவர்கள் கடலில் மூழ்கிவிட்டனர். 

"சுறா ஸ்டீபன்ஸ்' என்று இந்தத் துறைமுகம் அழைக்கப்பட்டாலும், இந்தப் பகுதியில் சுறாவே கிடையாது.  மேலே இருந்துபார்த்தால் இந்தப் பகுதி சுறா போன்று தெரியும். சிட்னி நகரில் இருந்து 2 மணி நேரப் பயணத்தில் வரலாம்.

மிக அழகான பிரதேசம், வெள்ளைவெளேர் மணல், சுத்தமான கடல்நீர், வீரதீர விளையாட்டுகள் மேற்கொள்ளப்படும் இடம், மணல் குன்றுகள் நிறைந்தது, மலைகள் நிறைந்தது, சுவையான கடல் உணள... என்ற சிறப்பம்சங்கள்இங்குள்ளன.

இங்குள்ள தேசியப் பூங்காவில் கடல் பறவைகள் நிறைந்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கோலா பார்ப்பதற்கு கரடி போலளம், நம் ஊரிலுள்ள தேவாங்கு போலளம் இருக்கும் பிராணி தண்ணீரை நேரடியாக அருந்தாது. தைலமர இலைகளில் உள்ள நீரை உண்பதன் மூலம் நீரைப் பருகுகின்றன.

கோலா சரணாலயம்: கைவிடப்பட்ட கோலாக்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு, இங்குள்ள சரணாலயத்தில் பராமரிக்கப்படுகின்றன. இனப்பெருக்கமும் நடைபெறுகிறது.

இத்தீவில் சிறிய கரையுள்ள நீர்படுகைகள் நிறைந்துள்ளன.  திமிங்கிலங்கள் அதிகம் காணப்படுகின்றன. சிவப்பு வண்ணத்துடன் கூடிய காட்டு அல்லிகளை நன்கு ரசிக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.