சிறுவர்மணி
தோப்பிலே...
தாத்தாவைத்த தென்னைமரம் தோப்பிலே
தகதகன்னு செவ்விளநீர் குலையிலே!
தீட்டிவைத்த அரிவாளினால் வெட்டலாம்
தென்னைஓலை நறுக்குவைத்தே குடிக்கலாம்!
பாட்டிவைத்த கொய்யாமரம் நடுவிலே
பழுத்திருக்கு கொய்யாப்பழம் கிளையிலே!
ஆட்டிவிட்டால் வந்துவிழும் தரையிலே
ஆசைப்பட்ட கொய்யாப்பழம் தின்னலாம்!
அப்பாவைத்த மாமரமும் அருகிலே
அதுநிறைய காய்த்துமரம் குலுங்குதே!
கட்டிவைத்த துறட்டியினால் பறிக்கலாம்
கற்கண்டாய் இனிக்கும்பழம் தின்னலாம்!