கலியாணம்...

Published on
Updated on
1 min read

வெயிலுக்கும் மழைக்கும் கலியாணமாம்

மேகம் மேளம் கொட்டுகிறதாம்

அயர்ந்த வண்டுகள் குழல் வாசிப்பாம்

அழகிய மரங்கள் பூச்சொறிந்ததாம்!

பூச்செடிகள் ஆட்டம் போட்டனவாம்

பொலபொல ஆலங்கட்டி விருந்தேதான்!

ஆச்சரிய மாய் சிறுவர் விருந்துண்டனர்

ஆகா எனத் தென்றல் வீசியதாம்!

ஊர்மக்கள் வியந்தே பார்த்தனராம்

ஒகோ எனவே கொண்டாட்டம்

சீராய் பறவைகள் வாழ்த்திசைக்க

சிறப்பாய் கலியாணம் நடக்கிறதாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com