வெயிலுக்கும் மழைக்கும் கலியாணமாம்
மேகம் மேளம் கொட்டுகிறதாம்
அயர்ந்த வண்டுகள் குழல் வாசிப்பாம்
அழகிய மரங்கள் பூச்சொறிந்ததாம்!
பூச்செடிகள் ஆட்டம் போட்டனவாம்
பொலபொல ஆலங்கட்டி விருந்தேதான்!
ஆச்சரிய மாய் சிறுவர் விருந்துண்டனர்
ஆகா எனத் தென்றல் வீசியதாம்!
ஊர்மக்கள் வியந்தே பார்த்தனராம்
ஒகோ எனவே கொண்டாட்டம்
சீராய் பறவைகள் வாழ்த்திசைக்க
சிறப்பாய் கலியாணம் நடக்கிறதாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.