அப்துல் கலாமை சீனக் கவிஞர் யூசி சந்தித்தபோது, திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை அளித்து படிக்கச் சொன்னார். "படித்து பிடித்திருந்ததால் திருக்குறளை சீன மொழியில் வெளியிடுங்கள்' என்று அப்துல் கலாம் கேட்டுக் கொண்டார்.
அதன்படி, திருக்குறளை ஐந்து ஆண்டுகள் படித்து வந்த யூசி, அதன் ஈரடி வழங்கிய ஆழத்தைக் கண்டு 2011-ஆம் ஆண்டில் உலகக் கவிஞர்கள் மாநாட்டில் அப்துல் கலாம் முன்னிலையில், திருக்குறளை சீன மொழியில் வெளியிட்டு சிறப்பித்தார்.