(இப்படி அல்லவா பழைய பொக்கிஷத்திலிருந்து தேடி எடுத்து வந்து புதிதாகப் படைக்க வேண்டும்!) சுவாதித் திருநாளின் புஷ்பலதிகா ராகப் பாடல் "பாவயே கோப பாலம்'கூட அதிகம் கேட்காததுதான். அடுத்து சாவேரி ராக ஆலாபனை. சாவேரி வந்தால் கூடவே காவேரிக் கரைக்காரர்தானே வருவார்! தியாகராஜரின் "ராம பாண' அதன் மிதமான நடையில் தென்றலாக இருந்தது. அதையடுத்து, "நினைந்தோடி வந்தேன்' என்று தொடங்கும் "சப்த ராக - சப்த தாள மாலிகை' (ஏழு ராகங்களில் - ஏழு தாளங்களில்)யில் தோடி, பூர்வி கல்யாணி, பைரவி, கல்யாணி, காம்போதி, முகாரி, வராளி என்று ராகங்களின் பெயர்களே பாடல் வரிகளில் வருகிற கீர்த்தனை, இதுவரை கேட்காதது.