

தேவையானவை:
அரிசிமாவு-300 கிராம்
தக்காளி-200கிராம்
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு,
பெருங்காயம்-1 தேக்கரண்டி
வற்றல் மிளகாய்-2
பச்சை மிளகாய்-2
இஞ்சி-1 துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி-சிறிதளவு
மோர்-50 மி.லி.
உப்பு, எண்ணெய்-தேவையான அளவு
செய்முறை:
அரிசி மாவில் உப்பைப் போட்டுத் தண்ணீர், மோர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்துத் தாளித்து அதனுடன் அரிந்து வைத்திருக்கும் தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் போட்டு வதக்கி, பிசைந்து வைத்திருக்கும் மாவையும் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். சிறிது எண்ணெயையும் ஊற்றிக் கிளறலாம். பொல பொலவென வரும் வரை கிளறி இறக்கிப் பரிமாற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.