"ஆக்ஸிஜன் பை' ஆளுநர் மாளிகை!
1670-களில் கிண்டி லாட்ஜ்ஜாக இருந்த இடம் தமிழக ஆளுநரின் குடியிருப்பான ராஜ்பவனாக பின்னாளில் மாற்றப்பட்டது. பரபரப்புக்கும், சுற்றுச்சூழல் மாசுபாடுக்கும் பெயர் போன சென்னை மாநகரின் மையத்தில் இப்படியொரு பசுஞ்சோலை அமைந்துள்ளது வியப்புக்குரியது. சுமார் 300 ஆண்டுகளாக இந்த வனம் பசுமையாக பராமரிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.










