ஒவ்வொரு மாணவனும் தான் நட்ட மரக்கன்றினை பாதுகாப்பாக பராமரிப்பதால் தற்பொழுது அனைத்துப் பகுதியிலும் மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் மரக்கன்றுகளை மக்கள் பங்கேற்புடன் நட்டுள்ளேன். இதற்கு அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு உள்ளது. செய்திகளில் இதனைப் படிக்கும் பலரும் தங்கள் பகுதியிலும், மரக்கன்றுகளை நடுவதற்கு அழைக்கிறார்கள். முடிந்த வரை அவர்களின் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம்.இதற்கு சுழற்கழக நிர்வாகிகள் எனக்கு உதவி வருகிறார்கள்'' என்று கூறிய அவரின் லட்சியம், நகரவாசிகளும் சுகாதாரமான காற்றினை சுவாசிக்கும் வகையில் புறநகர்ப் பகுதிகளிலும் மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதுதான்.