வெகு கச்சிதம்!
கலப்புத் திருமணத்தை ஆதரிக்கிறவர்களும், எதிர்க்கிறவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய நாடகம் "நிதர்சனம்'. முன்னேறாத சமூகங்கள் இன்னும் ரிசர்வேஷன் தொடர்வதை ஆதரிக்க, முன்னேறிய சமூகங்கள் தங்கள் எதிர்காலம் முடங்கிப் போய்விட்டது போல் உணர, வசனங்களில் கூர்மையை வாளின் நுனி போல் வார்த்தெடுத்திருக்கிறார் நாடகாசிரியர் கே..எஸ்.என். சுந்தர்.










