தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் பூர்வீகமாக வசிக்கும் நாடுகளில் மலேசியா குறிப்பிடத்தக்கதாகும். அனைத்துத் தரப்பு மக்களையும் மேற்கத்திய நாகரிகம், கலாசாரம் சூழ்ந்து கொண்ட நிலையிலும், மலேசியாவில் வசிக்கும் பெரும்பாலான தமிழர்கள், பிற மொழிக் கலப்பில்லாத தனித் தமிழில் எழுதியும், பேசியும் மொழியின் மாண்பைக் காத்து வருகின்றனர் என்றால் அது மிகையல்ல.
உலகளவில் தமிழ்மொழியின் புகழ் பரப்பும் பல்வேறு மாநாடுகளை முந்திக் கொண்டு நடத்துவதிலும், மலேசியா தனித்துவம் பெற்றுள்ளது. அந்த வரிசையில், தமிழகம், புதுச்சேரி, இலங்கை, சிங்கப்பூர், கனடா, பிரான்சு, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கான எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள், ஆர்வலர்களைத் திரட்டி, ஜூன் 8}ஆம் தேதி முதல் 10}ஆம் தேதி வரை, மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும், மலாய் பல்கலைக்கழகமும் இணைந்து, அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் மலாய்
பல்கலைக்கழகத்தில், முதலாம் தமிழ்க் குழந்தைகள் இலக்கிய மாநாட்டை நடத்தின.
குழந்தைகளுக்குத் தேவையான இலக்கியங்களைப் படைப்பது குறித்தும், குழந்தைகளையே இலக்கியங்கள் படைக்கச் செய்வது குறித்தும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து, பெருமை சேர்த்தனர்.
ஈராண்டுக்கு ஒருமுறை குழந்தைகள் இலக்கிய மாநாடு நடத்துவது, சிறந்த குழந்தை இலக்கிய நுôல்களைத் தேர்வு செய்து பரிசுகள் வழங்குவது, குழந்தைகளுக்கு இணைய வழி மின் நூல் துவக்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
முத்தாய்ப்பாக, ஜூன் 9}ஆம் தேதி இரவு, மலாயாப் பல்கலைக்கழக கலையரங்க மண்டபத்தில் சிறுவர் இலக்கியக் கலைவிழா நடைபெற்றது. அந்த விழாவில், முற்றிலும் குழந்தைகளே ஏற்று நடத்திய கலைநிகழ்ச்சிகள், அரங்கத்தில் குவிந்திருந்த சர்வதேச தமிழ் அறிஞர்களை மெய்ச்சிலிர்க்க வைத்தன.
முயல், புலி போன்று தத்ரூபமாக வேடமணிந்த சிறுவர்கள் தொகுத்து வழங்கிட, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் நடைபெற்ற அந்த விழாவில், பரத நாட்டியம், கவியரங்கம், பாரம்பரிய நடனம், வரலாற்றுக் கவிதை நாடகம் ஆகியவற்றை நடத்திய மலேசியக் குழந்தைகள் அனைத்துத் தரப்பினரையும் வியக்க வைத்தனர்.
கலைவிழாவில், சிறுதுளி கூட பிறமொழி வார்த்தைகள் கலப்பின்றியும், திரைப்படப் பாடல்கள், சாயல்கள் ஏதுமின்றியும், முழுக்க முழுக்க கலாசாரம் சார்ந்த விழாவை நடத்தியது மலேசியக் குழந்தைகளின் மீதான தாய் மொழி ஆர்வத்தை உலகத் தமிழர்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்ததென்றால், அது மிகையல்ல.
தமிழகத்தில் இப்படிப்பட்ட பாரம்பரிய கலைவிழாக்களை நடத்தி, தமிழ் குழந்தைகளுக்கு, மொழி, கலாசாரம், பண்பாடு மீதான ஆர்வத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்த வேண்டியது இலக்கியம் சார்ந்த அமைப்புகளுக்கு மட்டுமின்றி, அரசுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் மிகப்பெரிய தார்மிகப் பொறுப்பாகியுள்ளது. அதற்கு மலேசியாவில் நடைபெற்ற முதலாம் தமிழ்க் குழந்தைகள் இலக்கிய மாநாடு புது அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி!!
பரபரப்பான 16! மோடி திருமணம், எப்ஸ்டீன் கோப்புகள், இஸ்ரேல் பயணம்... ராகுலின் புதிர் என்ன?

எழுத்துபூர்வமாக உறுதியளிக்கத் தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


