குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

காந்தியின் குரு

ஒரு சமயம் காந்தியின் செருப்பு பழுதாகிவிட்டது. மனுபென், காந்திக்கு தெரியாமல் செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் கொண்டு போய் கொடுத்து சரி செய்யும் படி கூறினார்.

News image
Updated On :19 ஜூலை 2020, 6:00 am IST


ஒரு சமயம் காந்தியின் செருப்பு பழுதாகிவிட்டது. மனுபென், காந்திக்கு தெரியாமல் செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் கொண்டு போய் கொடுத்து சரி செய்யும் படி கூறினார்.

காந்தி செருப்பைக் காணோம் என்று தேட, மனுபென் உண்மையை சொல்லிவிட்டார்.

"கூலிக்காக தைத்து தருவதாக சொன்னானா அல்லது காந்தியின் செருப்பாயிற்றே என்று சும்மா தைத்து தருவதாக சொன்னானா' என்று காந்தி கேட்க, 

"கூலி எட்டணா என்றான். மேலும் தங்களது செருப்பு என்று அவனுக்குத் தெரியாது' என்றதும்

"எட்டணாவை யார் தருவது? நீயும் நானும் ஒன்றும் சம்பாதிக்கவில்லையே.' மனுபென் செருப்பு தைப்பவனிடம் சென்று செருப்பை திரும்பக் கேட்க ""இன்று காலையில் எனக்கு கிடைத்த முதல் வேலை. எனவே அப்படியே திருப்பித்தர முடியாது'' என்றான்.

"அது காந்தியின் செருப்பு கொடுத்துவிடு'

"அப்படியா நான் ரொம்ப அதிர்ஷ்டம் செய்தவன். சும்மாவே வேலை செய்து தருகிறேன்.

"மனுபென்னுக்கு சங்கடமாகி செருப்பு தைப்பவனை காந்தியிடம் அழைத்துச் சென்றார்.

"என்னுடைய செருப்பு தைப்பதை பாக்கியமாக கருதுகிறாயா நல்லது. என்னை உன் சீடனாக ஏற்றுக்கொண்டு செருப்பு தைக்கும் கலையை கற்றுக்கொடு' என்றார். 

சம்மதிக்கவே, காந்தி அமர்ந்திருந்த இருக்கையில் அவனை அமரச் செய்து அவன் எதிரே காந்தி உட்கார்ந்தபடி அவன் தைப்பதை கூர்மையாக பார்க்கத் தொடங்கினார்.

(100 மறக்க முடியாத நிகழ்ச்சிகள் நூலில் இருந்து) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.