தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

செல்லிடப்பேசியில் எடுக்கப்பட்ட சினிமா!

ஓடிடி மூலம் உள்ளங்கையில் சினிமா  வந்து விட்டது. இப்போது அதே சினிமா செல்லிடப்பேசி காமிரா மூலமாகவே படமாக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :1 நவம்பர் 2020, 2:08 pm

DIN

ஓடிடி மூலம் உள்ளங்கையில் சினிமா  வந்து விட்டது. இப்போது அதே சினிமா செல்லிடப்பேசி காமிரா மூலமாகவே படமாக்கப்பட்டுள்ளது. இப்படியொரு ஆச்சரிய சினிமா எடுத்துக் காட்டியிருக்கிறார்  சந்தோஷ் நம்பிராஜன்.

ழியனின் "டூ லெட்' படம் மூலம் அறிமுகமான சந்தோஷ் நம்பிராஜன் செல்லிடப்பேசி மூலமாகவே முழுப் படத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ளார். இப்படத்தின் கதை எழுதி இயக்கியிருப்பதோடு, படத்தின் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.  "அகண்டன்' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படம் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய மூன்று நாடுகளில்   படமாக்கப்பட்டுள்ளது. 

செல்லிடப்பேசியில் எடுத்தாலும் இப்படம் திரையில் பார்க்கக் கூடிய விதத்தில், மிகப்பெரிய மெனக்கெடலோடு படமாக்கப்பட்டுள்ளது. 

சந்தோஷ் நம்பிராஜன் பேசும் போது... "" ஐபோன் 11 புரோ செல்லிடப்பேசி இதற்குப் பயன்படுத்தினோம். போனில் படம் பார்ப்பதற்கு அடுத்து செல்லிடப்பேசி படமாக்கும் தொழில்நுட்பம் சினிமாவில் மிகப் பெரிய ஒரு புரட்சியை உருவாக்கும். அனைவருக்கும் சினிமா என்பது கனவு, அந்த கனவை நிறைவேற்றும் வகையில் சினிமாவை எளிமையான முறையில் எடுப்பதற்கான புதிய வழியை காட்ட வேண்டும், என்ற என் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. செல்லிடப்பேசி, கதையும் இருந்தால் போதும் அனைவராலும் படம் எடுக்க முடியும்  என்பதை நிரூபித்திருக்கிறோம். சாலையோரங்களில் இரவு சாப்பாட்டுக் கடை வைத்திருக்கும் ஒருவனுக்கு ஒரு கனவு இருக்கிறது. ஒரு கட்டடத்தில் வாடகைக்கு இடம் பிடிக்க வேண்டும். அதற்கு முதலாளியாக தன்  மனைவியை அமர வைத்து பார்க்க வேண்டும் என்பது அந்தக் கனவு. அந்தக் கனவில் இடியாக வந்து விழுகிறது ஒரு கொலை வழக்கு. அந்தக் கொலை வழக்கில் இருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்ற சிங்கப்பூர் சென்றாக வேண்டும் என்ற கட்டாய சூழல், தெரியாத மொழி, தெரியாத நாடு, ஆனால் தன் காதல் மனைவிக்காகப் பல இன்னல்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக நாடு திரும்புவதுதான் திரைக்கதை. விரைவில் படம் வெளியாகும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.