திருவாரூரில் மேடையில் இருந்த வாரியாருக்கு மாலை அணிவிப்பதற்காக அன்பர் ஒருவர் வந்தார். ஏற்கெனவே வாரியாரின் கழுத்தில் மாலை இருந்ததால் தன்னிடம் இருந்த மாலையை அணிவிக்காமல் கையில் வைத்தபடியே நின்றார்.
இதை அறிந்த வாரியார், மாலையை கழற்றி, அருகில் இருந்தவரிடம் கொடுத்தார். உடனே இதற்காகவே காத்திருந்தவர் போல் விறுவிறுவென வாரியாருக்கு மாலை அணிவித்தார் அன்பர்.
அப்போது கூட்டத்தினரை பார்த்து "எப்போதும் நம்மிடம் இருப்பதை எவருக்காவது கொடுத்தால் தான், அடுத்தவர்கள் நமக்கு கொடுப்பார்கள்' என்றார் வாரியார்.
மேடை முன் அமர்ந்திருந்த சிறுவர்களைப் பார்த்து "நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா?' என்று கேட்டார் வாரியார்.
சிறுவர்கள் பதில் தெரியாமல் மிரட்சியுடன் அவரைப் பார்த்தனர். சிரித்துக் கொண்டே இதோ இங்கே இருக்குது அசைவ உணவு சாப்பிடும் அனைவருக்கும் அவரவர் வயிறே சுடுகாடு என்று கூறி வயிற்றைத் தடவி காண்பிக்கக் கூட்டத்தில் பலத்த சிரிப்பொலி.
(கிருபானந்த வாரியார் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!

உ.பி.யில் தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் வன்முறை
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


