இன்று இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய ஒரு படத்தில், சீரியஸ் ஆக இருக்கும் கதாபாத்திரத்தில் நான் நடித்தேன் என்று சொன்னால், எனக்குப் பெருமை தான். அந்தப் படம் "பூவா தலையா'. இந்தப் படம் "பொம்ம புருஷா' என்ற பெயரில் தெலுங்கிலும், "பலபிரேக்ஷணம்' என்ற பெயரில் மலையாளத்திலும், "போலண்டு உய்யாலே' என்ற பெயரில் கன்னடத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது. 4 மொழிகளிலும் வெற்றி பெற்ற படம். இந்தப் படத்தின் மூன்று மொழிகளிலும், நான் தமிழில் செய்த வேடத்திலேயே நடித்தேன். அந்த மொழிகள் தமிழ், மலையாளம், தெலுங்கு. தமிழில் நாகேஷ் எனக்கு ஜோடி, மலையாளத்தில் அடூர் பாசியும், தெலுங்கில் சலத்துடன் ஜோடி சேர்ந்தேன். அப்பொழுது சீரியஸ் ரோல் செய்வதால் என்னிடம் வந்து இயக்குநர் கே.பாலச்சந்தர் ஒரு விஷயத்தைக் கூறினார். அது என்ன?