அந்தக் காலகட்டங்களில் தான் ஸ்ரீதர், பல்வேறு புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதற்குக் காரணம், பழக்கப்பட்ட நடிகர் என்றால், அவர்கள் நடிப்பு அவருக்குத் தெரியும். அதனால் அவர்கள் நடிக்கும் போது சிறு, சிறு மாற்றங்கள் மட்டும் சொல்லிவிடுவார். அவர்கள் நடிப்பு நன்றாக இருந்தது என்றால் ஓகே சொல்லிவிடுவார். புதுமுகங்கள் என்றால், முதலில் அவர்களுக்குக் காட்சியை விளக்கிச் சொல்லி விட்டு, "எப்படி நீங்கள் நடிக்கிறீர்களோ, அப்படி நடியுங்கள்' என்று அவர்கள் போக்கில் விட்டு விடுவார். அப்புறம், இதில் இப்படிச் செய்தால், நன்றாக இருக்கும் என்று திருத்துவார்.