முதல் இந்திய நீதிபதி

ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் இந்திய நீதிபதியாக இருந்தவர் டி.முத்துசாமி அய்யர்.
Published on
Updated on
1 min read


ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் இந்திய நீதிபதியாக இருந்தவர் டி.முத்துசாமி அய்யர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 1877-ஆம் ஆண்டு முத்துசாமி அய்யர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து தெருவிளக்கில் படித்து உயர்ந்தவர். பல்கலைக்கழகங்களில் பல்வேறு பட்டங்கள் பெற்றிருந்தாலும் அவருக்குக் கிடைத்த முதல் வேலை கிராம கணக்குப்பிள்ளை. அதன் பின் தன் உழைப்பாலும் கூர்ந்த மதியாலும் படிப்படியாக பல பதவிகளைப் பெற்றார். முன் சீப்பாக பதவி பெற்ற அவர் பின்னாளில் உதவி ஆட்சியராகப் பொறுப்பேற்றார். அதையடுத்து மாவட்ட மாஜிஸ்திரேட்டாகவும் அதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்தார். 

வழக்கின் போது வழக்குரைஞர் வாதங்களைப் பொறுமையாகக் கேட்டு நடுநிலையோடு தீர்ப்புகளை வழங்கியவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com