தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பழைய நட்பு மாறக்கூடாது

அப்துல்கலாம் ஐயா,  ஜனாதிபதி பதவியேற்ற உடனேயே என்னை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்தார். அவர் எதிரிலே நான் அமர்ந்தேன்.

News image
Updated On :10 ஏப்ரல் 2022, 12:30 am

DIN

அப்துல்கலாம் ஐயா,  ஜனாதிபதி பதவியேற்ற உடனேயே என்னை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்தார். அவர் எதிரிலே நான் அமர்ந்தேன். அப்பொழுது அவர் சொன்னது சார், "உங்களது தேச சேவை மகத்தானது. நாடே உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது'  என்று அவர் அன்போடு ஆரம்பித்த போது பேச்சில் நான் குறுக்கிட்டேன்.

"ஐயா, நீங்கள் நாட்டின் மிக உயர்ந்த ஜனாதிபதி. அதோடு என்னை விட வயதில் பெரியவர். தயவு செய்து இனி மேலாவது என்னை சார் என்று அழைக்காதீர்கள். நான் நாட்டிற்கு என் கடமையைத் தான் செய்தேன்'  என்று சொன்னேன்.

அதற்கு அவர் " நண்பர்கள் எப்போதும் நண்பர்கள் தான். உயர்ந்த பதவிக்கு வந்தால் பழைய நட்பு மாறக்கூடாது. ராஜிவ் காந்தி வழக்கில் கொலை விசாரணையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது என்று எல்லோரும் கருதிய போதும், நீங்கள் உயிரை பணயம் வைத்து இரவு-பகலாக பாடுபட்டு எங்கோ இருந்து வந்த அந்த பயங்கரவாத இயக்கத்தை பற்றியும், குற்றவாளிகளை பற்றியும் தடயம் சேகரித்தீர்கள். 

எந்த அரசியல் குறுக்கீட்டிற்கோ, அச்சுறுத்தலுக்கோ சிறிதும் அஞ்சாமல், குற்றவாளிகளை அடையாளம் கண்டு, தடயம் சேகரித்து, சாட்சிகளை கண்டுபிடித்து, இரண்டு உச்ச மட்ட நீதி விசாரணைகளையும் சந்தித்து, உச்சநீதிமன்றமும், உலகமுமே பாராட்டும்படி வழக்கில் வெற்றி கண்டீர்கள். அதனால் உங்கள் உயிருக்கும் ஆபத்து நேர்ந்ததோடு, உங்கள் மனைவி கலாவும் இருதய நோயால் பாதிக்கப்பட்டார். நீங்கள் இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்தியதால், நாட்டின் கெளரவம் நாட்டின் பாதுகாப்பு பலப்பட்டது. இந்திய நாடே உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. நான் இப்போது இந்த நாட்டின் குடியரசுத் தலைவர், உங்களுக்கு எந்த பதவி வேண்டும். ஆளுநர்,  வெளிநாட்டு தூதர் எந்த பதவி வேண்டுமானாலும் கேளுங்கள். நான் அதை உங்களுக்கு அளித்து மகிழ்வேன் அது என் கடமை'  என்று உறுதியாக பாசத்தோடு சொன்னதைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்ததோடு நான் மிக உணர்ச்சிவசப்பட்டேன். 

-டி.ஆர். கார்த்திகேயன்  எழுதிய
"உலக உத்தமர் கலாம்'  நூலிலிருந்து...
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.