தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

இரவே இல்லாத நாடுகள்..!

ஐரோப்பாவின் வடக்குப் பகுதியான நார்வேயில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஐந்து மாதங்களுக்கு சூரியன் மறைவதே இல்லை.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:24 am IST


நார்வே:

ஐரோப்பாவின் வடக்குப் பகுதியான நார்வேயில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஐந்து மாதங்களுக்கு சூரியன் மறைவதே இல்லை. ஏனெனில் இது ஆர்டிக் பகுதிக்கு மிக அருகில் உள்ளது. இதனால், பூமி சுழன்றாலும் கூட இதன் அச்சில் எந்த மாற்றமும் இருக்காது.

கனடா:

கனடாவின் வடமேற்கில் ஆர்டிக் வட்டத்துக்கு மேலே இரு டிகிரிக்கு தொலைவில் நுளைவுட் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடம் இரண்டு மாதங்களுக்கு மேலாக சூரிய ஒளியைக் காண்கிறது. இங்கு சூரியன் அஸ்தமனம் ஆகாமல், அப்படியே பகல் பொழுதாகவே நீடிக்கிறது.

ஐஸ்லாந்து:

ஐஸ்லாந்தில் ஜூன் மாதம் முழுவதும் "மிட்நைட் சன்' என்று அழைக்கப்படும் நள்ளிரவு சூரியனை இங்கு காண முடிகிறது.

அலாஸ்கா:

அலாஸ்காவில் உள்ள பாரோ என்ற இடத்தில் மே மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஜூலை மாதத்தின் இறுதி வரை இங்கு சூரியன் மறைவதே இல்லை.

பின்லாந்து:

கோடைகாலத்தில் தொடர்ச்சியாக , 73 நாள்களுக்கு சூரியன் அஸ்தமிப்பது இல்லை.

ஸ்வீடன்:

மே தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரை சூரியன் நள்ளிரவில்தான் மறையும். அதே சமயத்தில் மறைந்த சிறிது நேரத்தில் அதிகாலை 4 மணிக்கு நாட்டில் சூரியன் உதயமாகிவிடும். ஸ்வீடனில் தொடர்ச்சியாக, சூரிய ஒளிக்காலம் ஆண்டில் ஆறு மாதங்கள் நீடிக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.