ஹிந்தி, மராத்தி திரையுலகில் மிகச் சிறந்த, செல்வாக்கு மிக்க நடிகராக உள்ள ஏழுபத்து நான்கு வயதாகும் நானா படேகரின் இயற்பெயர் விஸ்வநாத் படேகர்.
ராணுவத்தில் சில ஆண்டுகள் லெப்டினென்ட் கர்னலாக பணிபுரிந்து, 1999-இல் நடைபெற்ற கார்கில் போரில் பங்கேற்றவர். 'மராத்தா லைட்' காலாட் படை பிரிவில் பணி புரிந்தவர்.
நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், திரைப்பட ஆலோசகர்.. எனப் பன்முகத்தன்மைகளைக் கொண்ட இவர், மூன்று தேசியத் திரைப்பட விருதுகளை வென்றவர், 'அனுபூதி' என்ற தொண்டு நிறுவனத்தை இவர் தொடங்கி, விவசாயிகள், வறட்சியில் தவித்தவர்களுக்கு உதவி வருகிறார். மும்பையில் வசித்த இவர், தற்போது மாநகருக்கு வெளியே வசிக்கிறார்.
'தற்போது 'வன்வாஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்தப் படம் ரிஷிகேஷ் முகர்ஜியின் 'ஆனந்த்' படம் போல் இருக்கும். நகைச்சுவையும், அழுகையும் கலந்திருக்கும். என்னிடம் வரும் பல ஸ்கிரிப்டுகளை ஏற்பதில்லை. நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்' என்கிறார் நானா படேகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.