இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளிப் பெண்!

பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

Published On :

பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

கணினித் தொழில்நுட்ப வல்லுநரான இவர், தொடக்கத்தில் ஸ்டார்ட் அப் ஒன்றைத் தொடங்கினார். பின்னர் ஆப்பிள் நிறுவனத்தில் தொழில் புரியத் தொடங்கியுள்ளார். கோபால்ட் லேப்ஸ் நிறுவனத்தின் இந்திய வம்சாவளி இணை நிறுவனரான கல்யாணி, மென்பொருள் பொறியாளரான ஆஷி அகர்வாலுடன் இணைந்து, ஃபோர்ப்ஸ் 30 வயதுக்கு உள்ட்ட 30 பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

நிதித் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவுத் துறையில் பணியாற்றிவரும் இவரது பங்கு ஆப்பிள் நிறுவனத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பயங்கரவாதிகள் பணப் பரிவர்த்தனையில் பண மோசடி செய்வதற்கு 'ஆப்பிள் பே'

செயலி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதில் கல்யாணி கவனம் செலுத்திவந்தார். இணைய இணைப்புகளில் மெதுவாகச் செயல்படும் தொழில்நுட்பங்கள், காலாவதியான செயல்முறைகள் நடைமுறையில் இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.

தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், மதிப்பாய்வு செய்து அபாயங்களைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கல்யாணி எடுத்தார். அதனால் பல சிக்கல்கள், குழப்பங்களுக்குத் தீர்வு கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.