வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

ஐசிசி டி20 மகளிர் கோப்பை கிரிக்கெட்! ஆணுக்கு நிகர் பெண் நடுவர்கள்!

ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் விண்வெளி முதல் விளையாட்டு வரை அனைத்திலும் திறம்படச் செயலாற்றி வருகின்றனர்.

Published On :5 ஜூலை 2026, 4:02 am IST

ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் விண்வெளி முதல் விளையாட்டு வரை அனைத்திலும் திறம்படச் செயலாற்றி வருகின்றனர். தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முற்றிலும் பெண்களே ஆட்ட நடுவர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். கோலாகலமாக நடைபெற்றுவரும் பிஃபா உலகக் கோப்பை ஆடவர் கால்பந்து போட்டியிலும் ஆறு பெண் நடுவர்கள் கலக்கி வருகின்றனர்.

ஆடவர் பங்கேற்கும் விளையாட்டு என்றால் மிகவும் ஆக்ரோஷமாக நடைபெறும். குறிப்பாக, கால்பந்து, ஹாக்கிப் போட்டிகளில் இரு தரப்பு வீரர்களும் மோதலில் ஈடுபடும்போது, அவர்களைச் சமாளிக்க ஆண் நடுவர்களே திணறுவர்.

கத்தார் 2022 உலகக் கோப்பையிலும், ஜெர்மனி-கோஸ்டாரிகா குரூப் சுற்று ஆட்டத்தில் ஸ்டெஃபானி பிராபர்ட், நிஸூவா பேக், கரேன் டயஸ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

இந்த நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) சார்பில் அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து நடத்தி வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 48 நாடுகள் பங்கேற்றுள்ளன. தற்போது நாக் அவுட் சுற்றை எட்டியுள்ள இந்தப் போட்டியில் பெண் நடுவர்களை பிஃபா களமிறக்கியுள்ளது.

6 பெண் நடுவர்கள் தேர்வு

போட்டிக்காக மெக்ஸிகோவின் கேட்டியா கார்சியா, நிகரகுவாவின் டாட்டியனா குஸ்மேன், புருக்கி மயோ, கேத்ரீன் நெஸ்பிட், சான்ட்ரா ரமீஸ், டோரி பென்ஸோ ஆகிய ஆறு பெண் நடுவர்களை பிஃபா தேர்வு செய்துள்ளது. இவர்கள் மைதானத்திலும், உதவி நடுவர்கள், விடியோ நடுவராகவும் செயல்படுகின்றனர். வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடும்போது, அவர்களை சமாளித்து ஆட்டத்தை நிர்வகிப்பதில் பெண் நடுவர்கள் வல்லவர்களாகத் திகழ்கின்றனர்.

3 ஆண்டுகள் நடைமுறை பிஃபாவின் பெண் நடுவர்கள் தேர்வு கால்பந்து விளையாட்டில் பெண்களுக்கு அதிகரித்து வரும் பங்கை உணர்த்துகிறது. உலகக் கோப்பைக்கு பெண் நடுவர்கள் எளிதாகத் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு 3 ஆண்டுகள் ஆனது. சர்வதேச ஆட்டங்களில் அவர்களின் செயல்பாடு, உள்ளூர் போட்டிகளில் நடுவர்களாகச் செயல்பட்ட விதம், உடல்தகுதி, தொழில்நுட்பச் சோதனை ஆகியவற்றால் தேர்வாயினர். குறிப்பாக, ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், ஆட்டத்தில் ஏற்படும் அழுத்தத்தைச் சமாளிப்பது போன்றவை முக்கியமானவை.

இதுகுறித்து பிஃபா நடுவர்கள் குழுத் தலைவர் பியுர்லியுகி காலினா கூறுகையில், 'உலகிலேயே சிறந்த பெண் நடுவர்களைத் தேர்வு செய்துள்ளோம்.

முப்பத்து ஒன்பது வயதான டோரி பென்úஸா அமெரிக்காவில் மேஜர் சாக்கர் லீக் தொடரில் நடுவராகச் செயல்பட்டார். 2023-இல் பிஃபா உலகக் கோப்பை மகளிர் கால்பந்து ஸ்பெயின்-இங்கிலாந்து இறுதி ஆட்டத்திலும் நடுவராகச் செயல்பட்டார். மெக்ஸிகோவின் கேட்டியா கார்சியா உலகக் கோப்பையில் பங்கேற்ற முதல் பெண் நடுவர் என்ற சிறப்பைப் பெற்றார். உலகக் கோப்பை போட்டியில் நடுவர்களாகச் செயல்படுவதற்கு முன்னர் 6 பெண்களும் பல்வேறு கால்பந்து லீக் தொடரில்களில் நடுவர்களாகச் செயல்பட்டுள்ளனர்'' என்கிறார் பியுர்லியுகி காலினா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.