மரமொன்றாகப் பசித்து, தழைத்து
காய்த்துக் கனிகிறேன் என்றால்
வேராய் இருப்பது
என்மொழி.
பறவையொன்றாய்ச் சிறகசைத்து
வானமளந்து நீலம் குடிக்கிறேன் என்றால்
இறகாய் இருப்பவை
என் எழுத்துகள்.
மரக்கலமொன்றாய் கடலளந்து
பூமிப்பந்தின் ஆழமளந்து
அலையாய் ஆர்ப்பரிக்கிறேன் என்றால்
காற்றாய் இருப்பவை
என் வார்த்தைகள்.
ஏழுகடல் ஏழுமலை தாண்டி
உயிர் சுமக்கும் கிளியை
ஊருக்குக் காட்டுகிறேன் என்றால்
வாகனமாய் இருப்பவை
என் கதைகள்.
வலி பொறுத்து
சிரிப்பதாய் நடிக்கச் சொல்லும்
வாழ்வின் முன்னே
காயங்களற்று உயிர்த்தெழும் எனக்கு
மந்திர மருந்தாய் இருப்பவை
என் இலக்கியங்கள்.
இசைத்துத் தீர்க்க முடியாத
என் மொழியின் சுரங்கள்
ஆலாபனைகளாய் காற்றில்.
பேசித் தீர்க்க முடியாத
என் மொழியின் எழுத்துகள்
புதுரத்தமாய்ப் பொங்கும் தொப்புள்கொடிகளில்
மொழிக்காடாய்
அடர்ந்திருக்கும் என்னிலிருந்து
காட்டாறாய்ப் பிரவகிக்கின்றன
மொழியின் புதுமைகள்.
மொழியிலிருந்து கிளைத்தவள் நான்
மொழியானவள் நான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிஜி தீவில் பவளப்பாறையில் மோதி தரைதட்டிய கப்பல்: 30 பயணிகள் மீட்பு!

காதல் இல்லாத அனைத்தும் அர்த்தமற்றது: த்ரிஷா
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


