சிலம்புக்கு மறுவாசிப்பு தேவை!
இளங்கோவடிகளின் படைப்பாகிய சிலப்பதிகாரம் அவருடைய கற்பனைப் படைப்பு அல்ல. நடந்த ஒரு சோக நிகழ்ச்சியை இளங்கோவின் சமகாலப் படைப்பாளியான சாத்தனார் எடுத்துச் சொல்லியதன் தாக்கத்தினால் எழுதப்பட்டது. சிலப்பதிகாரத்தின் நோக்கம் முப்பெரும் உண்மைகளைச் சொல்லவந்த படைப்பு என்பதே அறிஞர்கள் பலரின் முடிபாகும்.










