நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மரக்காயனாரா மாக்காயனாரா?

"ஏலாதி' ஆசிரியர் கணிமேதாவியாரின் ஆசிரியர் (அல்லது தந்தை) பெயர்

News image
Updated On :24 நவம்பர் 2012, 5:56 pm

செ. இராசு

"ஏலாதி' ஆசிரியர் கணிமேதாவியாரின் ஆசிரியர் (அல்லது தந்தை) பெயர் மரக்காயனார் என்று தமிழ்மணியில் வெளியானதைக் கண்டேன். ஏலாதி பதிப்புக்களிலும், ஏலாதி பற்றி எழுதியோரும் மாக்காயனார் என்றே குறிக்கின்றனர். ஓலைச்சுவடியில் இரண்டும் ஒரே மாதிரியே காணப்படும்.

ஆனால், சங்க இலக்கியங்களில் மாமூலனார் (குறு.11), மாமலாடனார் (குறு.46), மாவளத்தனார் (குறு.3481), மாசாத்தனார் (புறம்.227), மாசாத்தியார் (அகம்.384) என வருவது நோக்க மாக்காயனார் எனக் கொள்வதே பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது.

(ஏலம் ஆதி 6 பொருள் சேர்ந்தது ஏலாதி சூரணம், ஏலம் ஆதி 14 பொருள் சேர்ந்தது ஏலாதி கிருதம். ஏலம் ஆதி 20 பொருள் சேர்ந்தது ஏலாதி கணம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.