ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஒü, அஃ - என்பவை மக்கள் வாயில் இருந்து மட்டுமா வருகின்றன? உயிருள்ளவை எல்லாம் ஒலிக்கும் ஒலிகள்தாமே இவை! இவ்வொலிகள் நீளவும், குறுகவும் கேட்டலும் இயற்கை அல்லவோ!
உயிரிகளின் ஒலியை எப்படி அழைப்பது? "உயிர்' என்று அழைப்பதுதானே முறை. உயிர் இயங்கும்! மெய்யாகிய உடலை இயக்கும்! உயிர் இயங்காவிடின் மெய் தானே இயங்காது.
"க், ங், ச், ஞ்' முதலாம் மெய்யெழுத்துகளை அப்படியே சொல்ல முடியுமா? சொல்லிப் பாருங்கள்! முடியவே முடியாது.
ஓர் உயிரை "இ' என்னும் உயிரைச் சேர்த்துத்தானே "இக்', "இங்', "இச்' "இஞ்' என்று சொல்ல முடிகிறது! இவ் வமைப்பு தமிழ் எழுத்தைச் சொல்லவும் எழுதவும் தொடங்கும்போதே, மெய்யியல் ஆகிய (தத்துவம்) உயரிய இறையியலைக் கற்பிப்பது அல்லவா!
முன்னே "இ' சேர்த்து "க்' என்பதை ஒலிக்கலாம்! இல்லையானால் "க' என, "ங' என, "ச' என, "ஞ' என ஒலிக்கலாம். எதனால்?
மெய்யெழுத்தை ஒட்டி உயிரெழுத்து ஆகிய "அ' வருகிறது அல்லவா! எந்த வண்டியையும் முன்னேயும் இயக்கல் உண்டு; தேவை ஏற்படின் பின்னேயும் இயக்கல் உண்டு அல்லவா! அப்படி இயற்கை இயங்கியல் வழிபட்ட அமைப்பு அது. குழந்தைகள் உருட்டும் வண்டி பண்டு தொட்டே உண்டு.
""பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்
முக்காற் சிறுதேர்''
என்பது பட்டினப்பாலை. நடைவண்டி இப்பொழுது எத்தனை வகையில் அமைக்கப்படுகின்றன என்பது நாம் அறியாதது இல்லையே! நடைவண்டி, மிதிவண்டி, குதியுந்து, உந்து, பேருந்து, தொடரி, வானூர்தி என எவ்வியங்கிக்கும் கால் (சக்கரம், உருளை) இல்லாமல் இயங்குகிறதா? கால் ஆகிய உருளை வடிவு வட்டம் தானே!
ஞாயிறு (கதிரோன்), திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, விண்மீன் முதலாம் எல்லாமும் சுழல்பவைதாமே! தம்மைத் தாமே சுற்றிக் கொண்டு பிறவற்றையும் சுற்றுபவை தாமே! இவை வட்டமாய் இருப்பதால்தானே இயங்குகின்றன!
அப்படி இயக்கமும் - சுழலும் - இடமாகவா, வலமாகவா? வலமாகத்தானே சுழல்கின்றன. காற்று எழுதல், தீ பரவல், நீர்ச் சுழல் அல்லது சுழி வட்டம்தானே! வலச் சுழற்சிதானே! பறவை எழும்புதல், ஆடு மாடு படுத்தல், மாந்தர் பனிவாடையில் ஒடுங்குதல் எல்லாம் வட்ட வளைதல் தானே!
இவ் வலச் சுழற்சி இயக்கம் கண்டு, வட்டெழுத்து, கோல் எழுத்து, கண்ணெழுத்து, ஓவிய எழுத்து எனக் கண்டு, ஆ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒü, ஃ என்பவற்றை "வலனேர்பு' முறையில் உயிரெழுத்தை அமைத்த அருமை அறிவியலொடு கூடிய மெய்யியல் விளக்கம் அல்லவா!
""வெட்டெழுத்துக் கொண்டு வட்டெழுத்தை முடிபு செய்யக்கூடாது'' என்பார் பாவாணர்.
தொடர்வோம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!

வாக்குச்சாவடிகளில் அல்வா! முதல்முறை வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் ருசிகர முடிவு!

முதல்வர் ஸ்டாலினின் 3ஆம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்

ரூ. 70 கோடி வசூலித்த யூத்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


