17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இலக்கியப் பொன்மொழிகள்

ஆபத்துக் காலத்தில் பெற்றோர்க்கு உதவி செய்யாத பிள்ளை, கடும் பசியால் வாடும்போது, அப்பசியைப் போக்கிக் கொள்வதற்குக் கிடைக்காத உணவு, தாகமாக இருக்கும்போது அதைத் தணிக்க உதவாத தண்ணீர், வறுமையை உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்ளாத பெண்கள், கோபத்தை அடக்கி ஆளாத அரசன், குருவின் உபதேசத்தைக் கேட்டு, அதன்படி நடக்காத சீடன், பாவத்தைத் தீர்க்காத புண்ணியத் தீர்த்தம் - இவை ஏழினாலும் மனிதனுக்கு எந்தவொரு பயனும் இல்லை.

News image
Updated On :25 மே 2014, 2:26 am IST

ஆபத்துக்கு உதவாத ஏழு!

ஆபத்துக் காலத்தில் பெற்றோர்க்கு உதவி செய்யாத பிள்ளை, கடும் பசியால் வாடும்போது, அப்பசியைப் போக்கிக் கொள்வதற்குக் கிடைக்காத உணவு, தாகமாக இருக்கும்போது அதைத் தணிக்க உதவாத தண்ணீர், வறுமையை உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்ளாத பெண்கள், கோபத்தை அடக்கி ஆளாத அரசன், குருவின் உபதேசத்தைக் கேட்டு, அதன்படி நடக்காத சீடன், பாவத்தைத் தீர்க்காத புண்ணியத் தீர்த்தம் - இவை ஏழினாலும் மனிதனுக்கு எந்தவொரு பயனும் இல்லை.

ஆபத்துக் குதவாப் பிள்ளை

அரும்பசிக் குதவா அன்னம்

தாகத்தைத் தீராத் தண்ணீர்

தரித்திரம் அறியாப் பெண்டிர்

கோபத்தை அடக்கா வேந்தன்

குருமொழி கொள்ளாச் சீடன்

பாபத்தைத் தீராத் தீர்த்தம்

பயனில்லை ஏழும் தானே!

(விவேக சிந்தாமணி-2)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.