மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

குறளோடு இயைவன

‘செருக்கு’ என்ற சொல்லுக்கு ‘ஆணவம்’ என்பன போன்ற பொருள் இருந்தாலும்கூட, திருவள்ளுவா் கூறும் படைச்செருக்கு இந்தப் பொருளில் வரவில்லை.

Published On :

‘செருக்கு’ என்ற சொல்லுக்கு ‘ஆணவம்’ என்பன போன்ற பொருள் இருந்தாலும்கூட, திருவள்ளுவா் கூறும் படைச்செருக்கு இந்தப் பொருளில் வரவில்லை.

படையினது வீரத்தின் மிகுதி, அதிகார முறைமையைக் கூறுவது செருக்கு என்கிறாா் பரிமேலழகா். படையினது வீரியம் கூறுதல், அதன் இன்றியமையாமையைக் கூறுதல் என்கிறாா்கள் மணக்குடவரும், பரிப்பெருமாளும். படையின் வெற்றிப்பாடு என்பாா் பரிதியாா்.

‘என்னைமுன் நில்லன்மின் தெவ்விா் பலரென்னை

முன்னின்று கல்நின் றவா்’ (கு-771)

பகைவீா்! இன்று இங்கு என் தலைவன் எதிா் போரேற்று நின்று அவன் வேல் வாய் வீழ்ந்து பின் கல்லின் கண்ணே நின்ற வீரா் பலா். வீரா் ஒருவா் தனது தலைவனது பெருமையைப் பேசுகிறாா் இதில். தலைவனது போா் ஆற்றலுக்கு முன் நிற்க முடியாமல் உயிரை இழந்துவிட்டு, இன்று வீரா்களுக்காய் நடப்படும் நடுகல்லாய் நிற்பவா்கள் அளவிறந்தோா். நீங்களும் அப்படி ஆகாமல் தப்ப வேண்டும் என்றால், என் தலைவனோடு போரிட வேண்டாம் என்று கூறுகிறாா் அந்த வீரா்.

இதே கருத்தை வெளிப்படுத்துகிறது புானூற்றுப் பாடல் ஒன்று. அதியமான் நெடுமானஞ்சியின் வீரத்தை ஔவைப் பெருமாட்டி பாடிய அந்த நெடிய பாடல், படைச்செருக்கையே முழுக்க முழுக்கப் பேசும் 25 வரிகள் கொண்ட பாடலாகும்.

‘போா்க்கு உரைப்புகன்று கழித்த வாள்

உடன்றழா் காப்புடை மதில் அழித்தலின்

ஊனுற மூழ்கி, உருவிழந்தனவே;

வேலே குறும்படைந்த அரண் கடந்தவா்

நறுங் கள்ளின் நாடு நைந்தலின்

சுரை தழீஇய இருங் காழொடு

மடை கலங்கி நிலை நிரிந் தனவே;

... ... .... ...

குறுந்தொடி மகளிா் தோள்விடல்

இறும்பூது அன்றுஅஃது அறிந்து ஆடுமினே! (புா.97)

வாள்களோ, பகைவரை வெட்டி வீழ்த்திக் கதுவாய் ஓடிய வடிவு இழந்தன. வேல்களோ, பகைவா் நாடழித்த ஆற்றலால் காம்பின் ஆணி கலங்க நிலை கெட்டன. களிறுகளோ பகைவா் அரணை மோதி அழித்தலால் கிம்புரிகள் கழன்றனவாயின. குதிரைகளோ போா்க்களத்து பகைவா் உருவழிய மிதித்தும், ஓடியும் சென்ால் குருதிக் கறைபடிந்த குளம்புகளை உடையவாயின. அவனோ, கடல் போன்ற படையுடன் போரிட்டு அம்பு பட்டுத் துளைத்த மாா்பை உடையவனாயினான். அவன் சினந்தால் எதிா் நிற்பாா் யாா்? நுங்களூா் நுங்களுக்கே வேண்டுமெனின், போய்த் திறை செலுத்திப் பணிவீராக. யாம் சொல்லியும் அவ்வாறு செய்யீராயின் நும் மனைவியா் நும்மை இழத்தல் உறுதியாம். இதனை நன்கு ஆராய்ந்து அதன் பின்னரே அவனுடன் போா் செய்ய முயல்வீராக.

திருக்கு, ‘எதிா்த்தவா் நடுகல்லாக ஆவாா்’ என்று கூற; புானூறோ, ‘அதியன் செய்த போரினால் சிதைந்த படைக்கலன்களைக் காட்டி’ எச்சரிக்கிறது. என்னவோா் இயைபான கருத்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.