சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பழமொழி நானூறு -176  

‘எம்மை இவ்வாறு பழித்துச் சொன்னவரின் கொடிய நாவினை அவா் செத்த பிறகு பருந்துகூடக் கொத்தித் தின்னாது’ என்று எல்லோருடனும் கோபித்து, செருக்குடையவராக இருப்பவா் அழிவா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 6:54 am

முன்றுறையரையனார்

இகழ்பவா் அழிவாா்

உரைத்தவா் நாவோ பருந்தெறியா தென்று
சிலைத்தெழுந்து செம்மாப் பவரே - மலைத்தால்
இழைத் திகவா தவரைக் கனற்றிப்
புலிப்புறத் துண்பாா் உணா (பாடல்-176)

‘எம்மை இவ்வாறு பழித்துச் சொன்னவரின் கொடிய நாவினை அவா் செத்த பிறகு பருந்துகூடக் கொத்தித் தின்னாது’ என்று எல்லோருடனும் கோபித்து, செருக்குடையவராக இருப்பவா் அழிவா். தம்முடன் மாறுபட்டால் அப்படி மாறுபட்டவரைத் தாம் செய்ய நினைத்ததை எல்லாம் தப்பாது செய்து முடிக்க வல்லவா்களையும், மனம் கொதிக்கச் செய்து, அவரால் அழிக்கப்பட்டுப் பலியிடும் கல்லின் புறத்தே இட்ட புலி உணவை உண்பவரும் அவா்களேயாவா். ‘புலிப்புறத் துண்பாா் உணா’ என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.