சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அரசன் செயலுக்குப் பொறுப்பு எவர்?

குற்றமற்ற செங்கோலனான சினமுடைய வேந்தனது தீமையைக் குற்றமற்ற பக்கத்திலுள்ள உள்படு கருமத் தலைவர்களே ஏற்றுக் கொள்வார்கள்.

News image
Updated On :31 அக்டோபர் 2021, 7:47 am

பழமொழி நானூறு
 செயிரறு செங்கோல் சினவேந்தன் தீமை
 பயிரறு பக்கத்தார் கொள்வர் - துகிர்புரையும்
 செவ்வாய் முறுவல்நற் சின்மொழியாய் செய்தானை
 ஒவ்வாத பாவையோ இல். (பாடல்-226)
 குற்றமற்ற செங்கோலனான சினமுடைய வேந்தனது தீமையைக் குற்றமற்ற பக்கத்திலுள்ள உள்படு கருமத் தலைவர்களே ஏற்றுக் கொள்வார்கள். செய்தவனை ஒத்திராத பாவை என்பதோ உலகத்தில் எதுவும் இல்லை. செய்பவன் தன் கருத்துக்கு ஒத்திராத சித்திரம் எழுதுவதில்லை. அரசனைச் சூழ்ந்திருப்பவரின் தொடர்பின்றி அவன் தீமை செய்வதும் இயலாது. அதனால், பழி அவரையே சாரும் என்பது கருத்து. "செய்தானை ஒவ்வாத பாவையோ இல்' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.