தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அலைகள் கடுமையாக வந்து மோதிச் செல்லும் கடற்கரையை உடைய தலைவனே! மழை பெய்தாலல்லாமல் பனி பெய்தலால் குளம் ஒருபோதும் நிறைவதில்லை.

News image
Updated On :8 ஜனவரி 2022, 6:30 pm


இனியாரை உற்ற இடர்தீர உபாயம்
முனியார் செயினும் மொழியால் முடியா 
துளியால் திரையுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப! 
பனியால் குளநிறைதல் இல். (பாடல்-236)


அலைகள் கடுமையாக வந்து மோதிச் செல்லும் கடற்கரையை உடைய தலைவனே! மழை பெய்தாலல்லாமல் பனி பெய்தலால் குளம் ஒருபோதும் நிறைவதில்லை. அதுபோல, தமக்கு இனியவரான ஒருவருக்கு நேர்ந்த துன்பம் தீர்வதற்கான உபாயத்தைக் கொஞ்சமும் வெறுப்பில்லாமல் செய்பவர் ஆனாலும், வெறும் வார்த்தைகளால் மட்டுமே அதனைத் தீர்க்க முடியாது. "வாய் உபசாரத்தால் மட்டும் பயனில்லை; பொருளாலும் செயலாலும் உதவ வேண்டும்' என்பது கருத்து. "பனியால் குளம் நிறைதல் இல்' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.