பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

சேர்த்த செல்வம் அழியும் என்பதை அறியாதும், ஒரு நாள் மரணம் வந்தே தீரும் என்பதை அறியாதும் சின்னச் சின்ன நுகர்வுகளில் மகிழ்ச்சி உற்று இல்லறத்தில் தொடர்ந்து இருந்து முதுமையில் மேற்கொள்ள வேண்டிய துறவை
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

செல்வத் துணைமையும், தம் வாழ்நாள் துணைமையும், தாம்
தெள்ளி உணரார், சிறிதினால் செம்மாந்து,
பள்ளிப்பால் வாழார், பதி மகிழ்ந்து வாழ்வாரே,
முள்ளித் தேன் உண்ணு மவர்.   (பாடல்: 274)


சேர்த்த செல்வம் அழியும் என்பதை அறியாதும், ஒரு நாள் மரணம் வந்தே தீரும் என்பதை அறியாதும் சின்னச் சின்ன நுகர்வுகளில் மகிழ்ச்சி உற்று இல்லறத்தில் தொடர்ந்து இருந்து முதுமையில் மேற்கொள்ள வேண்டிய துறவை மேற்கொள்ளாதவர் சிறப்பற்ற முள்ளிப் பூவின் தேனை உண்டு நல்ல தேனை உண்ணுவதாக நினைத்துக் கொண்டு இருக்கும் தேனீயைப் போன்றவர் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com