மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உலக நாடுகளை ஒருசேர வென்று ஆளவேண்டும் என்ற கொள்கை உள்ள அரசர், தன்னை எல்லைப் படுத்திக் கொள்ளாமல் தனக்கு ஒரு காலத்துத் தீமை செய்தவரையும் இனிய சொல்லாடல் மூலம் அன்பாகப் பேசி அணைத்துக் கொள்ளுவர்.

News image
Updated On :18 செப்டம்பர் 2022, 11:12 am


எல்லை ஒன்று இன்றியே இன்னா செய்தாரையும்,
ஒல்லை வெகுளார், உலகு ஆண்டும், என்பவர்,
சொல்லின் வளாஅய், தம் தாள் நிழற்கீழ்க் கொள்பவே,
கொல்லையில் கூழ் - மரமே போன்று.  (பாடல்: 272)

உலக நாடுகளை ஒருசேர வென்று ஆளவேண்டும் என்ற கொள்கை உள்ள அரசர், தன்னை எல்லைப் படுத்திக் கொள்ளாமல் தனக்கு ஒரு காலத்துத் தீமை செய்தவரையும் இனிய சொல்லாடல் மூலம் அன்பாகப் பேசி அணைத்துக் கொள்ளுவர். தோட்டம் வைக்க விரும்புகின்றவர் நல்லன தரும் எல்லா மரங்களையும் வைத்து வளர்த்துக் கொள்ளுதல் போன்றவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.