பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

இனிய சாயலையும், மெலிந்த இடையையும் உடைய பெண்ணே! ஒருவர் மிகப்பெரிய அளவில் செல்வத்தைப் பெற நேர்ந்தால், அச்செல்வம் சிறக்க மற்றவர்க்கும் கொடுத்து உவக்க வேண்டும்.
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
Updated on
1 min read

மல்லல் பெருஞ் செல்வம் மாண்டவர் பெற்றக்கால்,
செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம், மெல் இயல்,
சென்று ஓசிந்து ஓல்கு நுசுப்பினாய்! பைங் கரும்பு
மென்றிருந்து, பாகு செயல்.     (பாடல்: 289)

இனிய சாயலையும், மெலிந்த இடையையும் உடைய பெண்ணே! ஒருவர் மிகப்பெரிய அளவில் செல்வத்தைப் பெற நேர்ந்தால், அச்செல்வம் சிறக்க மற்றவர்க்கும் கொடுத்து உவக்க வேண்டும். அதுவே செல்லும் வழியைச் சேம வழியாக்கும். அச்செயல் பச்சைக் கரும்பைக் கடித்துச் சுவைப்பதுடன் அதனைப் பாகாக்கிச் சுவைப்பதற்கு நிகராகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com