பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

கடலில் நீராடச் சென்றவன் அலைகள் ஓய்ந்த பின்தான் நீராடுவேன் என்றால் நீராடவே முடியாது.
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
Updated on
1 min read


வரை புரை வேழத்த, வன் பகை என்று அஞ்சி,
உரையுடை மன்னருள் புக்கு, ஆங்கு அவையுள்
நிரை உரைத்துப் போகாது, ஒன்று ஆற்றத் துணிக!
திரை அவித்து, ஆடார் கடல்.  (பாடல்: 317)


கடலில் நீராடச் சென்றவன் அலைகள் ஓய்ந்த பின்தான் நீராடுவேன் என்றால் நீராடவே முடியாது. அதுபோல, யானையை ஒத்த வீரத்தை உடையவன் பகை என்று அஞ்சி, பகை அரசனின் அரசவையில் வெறும் வீறாப்பு மொழி மட்டும் பேசி, பகையரசனிடம் இருக்கும் மலையொத்த யானைகளை எல்லாம் மடியட்டும் என்று காத்திராமல், பகைவனின் பகை  முடிக்கத் துணிச்சல் கொள்ளுதல் வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com