மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

ராவுத்தன் எனும் முருகன்

குதிரை வீரன் முருகன்: அருணகிரிநாதரின் புகழ்பெற்ற வர்ணனை

Published On :

கந்தர் அலங்காரம் என்பது அருணகிரிநாதப் பெருமான் முருகப்பெருமானைப் பற்றி இயற்றிய நூலாகும். இதில் அருணகிரிநாதர் முருகனை ராவுத்தனே என்று அழைக்கிறார்.

ராவுத்தன் என்ற சொல்லுக்கு குதிரை வீரன் என்பது பொருள் (சில இடங்களில் யானை வீரனையும் சுட்டும்).

திருப்பெருந்துறை ஆத்மநாத சுவாமி கோயிலின் முன்பு ஒரு மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் ஒரு தூணில் குதிரைச் சேவகராக எம்பெருமானின் உருவம் உள்ளது. அது குதிரை ராவுத்தர் என்றும் திருவுருவம் தாங்கி நிற்கும் மண்டபம் குதிரை ராவுத்தர் மண்டபம் என்றும் வழங்கப்பட்டு வருகின்றன. முருகப்பெருமான் மயிலாகிய குதிரையின் மீது ஏறிவந்து போரில் சூரனை அழித்தமையினால் ராவுத்தர் என்னும் பட்டம் அவனுக்குக் கிடைத்தது.

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர்

காமக் கலவிக் கள்ளை

மொண்டுண்டு அயர்கினும் வேல்மற

வேன் முது கூளித்திரள்

டுண்டுண் டுடுடுடு டூ டூ

டுடுடுடு டுண்டுடுண்டு

டிண்டிண் டெனக்கொட்டி ஆடவெஞ்

சூர்க்கொன்ற ராவுத்தனே!

"கற்கண்டைப் போன்ற இனிய சொற்களை உடையவரும் மென்மையானவருமான மகளிர்பால் காம உணர்ச்சியினால் பெறும் கலவியின்பமாகிய கள்ளை எல்லையின்றி நுகர்ந்து யான் செய்ய வேண்டிய கடமைகளை மறந்தாலும், உன் வேலாயுதத்தை மட்டும் மறக்க மாட்டேன். முதிர்ந்த பேய்க் கூட்டங்கள் தமக்கு விருந்துணவு கிடைத்த மகிழ்ச்சியினால் "டுண்டுண் டுடுடுடு ' என்ற ஒலி எழும்படியாக முரசுகளைக் கொட்டிக் கொண்டு கூத்தாடும்படி கொடிய சூரபன்மனைப் போர்க்களத்தில் மயிலாகிய குதிரையின் மீது ஏறிவந்து கொன்று அருளியவனே' என்பது இதன் பொருள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.