திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

ஆராயாமல் எழும் நெஞ்சம்

இளமையாகிய சிறந்த பருவமும் வீணே கழிந்து விட்டது. இப்பொழுதே நோய்நொடியொடு கிழத்தனமும் வந்து நம்மைச் சேர்ந்து விடும்.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 11:16 am

கொன்னே கழிந்தன்று இளமையும்! இன்னே

பிணியொடு மூப்பும் வருமால்;-துணிவொன்றி

என்னொடு சூழாது, எழுநெஞ்சே! போதியோ,

நன்னெறி சேர, நமக்கு?

( பாடல் 55 அதிகாரம்: துறவு )

இளமையாகிய சிறந்த பருவமும் வீணே கழிந்து விட்டது. இப்பொழுதே நோய்நொடியொடு கிழத்தனமும் வந்து நம்மைச் சேர்ந்து விடும். ஆதலால், துணிவினைப் பொருந்தி, என்னொடும் ஆராயாமல் எழுகின்ற நெஞ்சமே! நமக்கு நல்ல வழியானது கிடைப்பதற்கு இப்போதாவது முயற்சி செய்யப்போகின்றாயோ, அல்லவோ? டஇளமையிலே, அதன் வழியாக நின்று உலக இன்பங்களிலே உழன்ற ஒருவன், நன்னெறியை நாடியவனாக, முதலிலே தன் மனத்தைத் தன் வழிப்படுத்த இப்படிச் சொல்கிறான்' என்று கொள்க.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.