மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

குரலை இழந்தது எப்படி? கலாரஞ்சினி விளக்கம்!

நடிகை கலாரஞ்சினி தன் குரல் குறித்து பேசியுள்ளார்...

kalaranjani

கலாரஞ்சனி

Published On :

நடிகை கலாரஞ்சினி தன் குரலை இழந்தது குறித்து பேசியுள்ளார்.

தமிழ், மலையாள உள்பட தென்னிந்திய சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கலாரஞ்சினி. நடிகை ஊர்வசியின் சகோதரியான இவர் இன்றும் நல்ல கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்தாலும் கலாரஞ்சனிக்கு பெரியளவில் பெயர் கிடைத்தது தொலைக்காட்சித் தொடர்களில்தான். பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்கள் என்பதால் அவை ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தன.

அண்மையில், இவர் நடிப்பில் வெளியான பரதநாட்டியம் திரைப்படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இப்படத்திற்கான, நேர்காணலில் பேசிய கலாரஞ்சனியிடம் அவர் குரலுக்கு என்ன ஆனது எனக் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் பிரேம் நசிர் படத்தில் ஒரு காட்சியில் ரத்த வாந்தி எடுப்பது போல் நடிக்க வேண்டியிருந்தது. வழக்கமாக, ரத்த வாந்தி மாதிரி தெரிய தேங்காய் எண்ணையுடன் சிவப்பு பவுடர் கலந்து குடித்து வாயில் வைத்திருக்க வேண்டும். காட்சியின்போது துப்பினால் ரத்த வாந்தி எடுப்பது போல் இருக்கும்.

ஆனால், அன்று மேக்கப் மேன் தவறுதலாக தேங்காய் எண்ணைக்குப் பதில் அசிட்டோனை (acetone) கலந்துவிட்டார். நான் குடித்ததும் தொண்டை எரிய ஆரம்பித்தது. பின், என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அந்தச் சம்பவத்தால்தான் என் குரல் போனது.” எனத் தெரிவித்துள்ளார்.

கலாரஞ்சினியால் பேச முடியும் என்றாலும் குரல் கரகரப்புடன் இருக்கும் என்பதால் டப்பிங் குரலே கொடுக்கப்பட்டு வருகிறது. கலாரஞ்சினி பகிர்ந்த இச்சம்பவம் ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Actress Kalaranjini has spoken about losing her voice.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.