/

குரலை இழந்தது எப்படி? கலாரஞ்சினி விளக்கம்!

நடிகை கலாரஞ்சினி தன் குரல் குறித்து பேசியுள்ளார்...

News image

கலாரஞ்சனி

Updated On :14 ஏப்ரல் 2026, 9:36 am

நடிகை கலாரஞ்சினி தன் குரலை இழந்தது குறித்து பேசியுள்ளார்.

தமிழ், மலையாள உள்பட தென்னிந்திய சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கலாரஞ்சினி. நடிகை ஊர்வசியின் சகோதரியான இவர் இன்றும் நல்ல கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்தாலும் கலாரஞ்சனிக்கு பெரியளவில் பெயர் கிடைத்தது தொலைக்காட்சித் தொடர்களில்தான். பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்கள் என்பதால் அவை ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தன.

அண்மையில், இவர் நடிப்பில் வெளியான பரதநாட்டியம் திரைப்படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இப்படத்திற்கான, நேர்காணலில் பேசிய கலாரஞ்சனியிடம் அவர் குரலுக்கு என்ன ஆனது எனக் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் பிரேம் நசிர் படத்தில் ஒரு காட்சியில் ரத்த வாந்தி எடுப்பது போல் நடிக்க வேண்டியிருந்தது. வழக்கமாக, ரத்த வாந்தி மாதிரி தெரிய தேங்காய் எண்ணையுடன் சிவப்பு பவுடர் கலந்து குடித்து வாயில் வைத்திருக்க வேண்டும். காட்சியின்போது துப்பினால் ரத்த வாந்தி எடுப்பது போல் இருக்கும்.

ஆனால், அன்று மேக்கப் மேன் தவறுதலாக தேங்காய் எண்ணைக்குப் பதில் அசிட்டோனை (acetone) கலந்துவிட்டார். நான் குடித்ததும் தொண்டை எரிய ஆரம்பித்தது. பின், என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அந்தச் சம்பவத்தால்தான் என் குரல் போனது.” எனத் தெரிவித்துள்ளார்.

கலாரஞ்சினியால் பேச முடியும் என்றாலும் குரல் கரகரப்புடன் இருக்கும் என்பதால் டப்பிங் குரலே கொடுக்கப்பட்டு வருகிறது. கலாரஞ்சினி பகிர்ந்த இச்சம்பவம் ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Actress Kalaranjini has spoken about losing her voice.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.