கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

ரஜினி - 173: சிபி சக்ரவர்த்தி விலக இதுதான் காரணமா?

ரஜினி - 173 திரைப்படத்தின் இயக்குநர் விலகல் குறித்து...

rajinikanth and cibi chakravarthy

ரஜினிகாந்த் மற்றும் சிபி சக்ரவர்த்தி

Published On :

இயக்குநர் சிபி சக்ரவர்த்தி நடிகர் ரஜினிகாந்த்தின் படத்திலிருந்து விலகியதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதற்கான முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தபோதே படத்தின் அறிவிப்பு விடியோவும் அதில் இடம்பெற்ற பின்னணி இசையும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

தற்போது, தயாரிப்பு நிறுவனம் இப்படத்திலிருந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தியை மாற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருக்குப் பதிலாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ரஜினி 173 படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்து 2 இயக்குநர்கள் மாற்றப்பட்ட தகவல் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சிபி நடிகர் நானியை வைத்து தெலுங்கில் ஒரு திரைப்படம் இயக்க இருந்ததாகவும் அதற்கான முன் தயாரிப்பு பணிகளுக்கு அதிக செலவானதால் தற்போது, அந்த தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் கொடுத்த நெருக்கடியாலேயே, ரஜினி 173 படத்திலிருந்து விலகியுள்ளாராம்.

மேலும், அஷ்வத் மாரிமுத்து நடிகர் சிலம்பரசனின் 51-வது திரைப்படத்தை இயக்கவுள்ளதால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்திடம் என்ஓசி பெற்று ரஜினி படத்தை இயக்க வருவாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

Summary

the reason behind director Cibi Chakravarthy's exit from Actor Rajinikanth's film

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.