அன்புடையோரின் கடுஞ்சொல்லும் தீதன்று!
பூக்களிலே எல்லாம் அழகிய வண்டினங்கள் மொய்த்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்ற, நிறைந்த கடலினது குளிர்ச்சியான கடற்கரையினையுடைய நாட்டின் தலைவனே!

காதலார் சொல்லும் கடுஞ்சொல், உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொலின் தீதாமோ- போதெலாம்
மாதர்வண் டார்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப
ஆவ தறிவார்ப் பெறின்?
(பாடல் 73 அதிகாரம்: பொறை உடைமை)
பூக்களிலே எல்லாம் அழகிய வண்டினங்கள் மொய்த்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்ற, நிறைந்த கடலினது குளிர்ச்சியான கடற்கரையினையுடைய நாட்டின் தலைவனே! தமக்கு நன்மையாவது எதுவென ஆராய்ந்து அறிபவரைப் பெற்றால், தம்மிடத்து அன்பு உடையவர் சொல்லும் கடுமையான சொற்கள் தம்பால் உவப்புடன் சொல்லுகின்ற அயலாரின் இனிய சொற்களைவிடத் தீதாகுமோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




