
மேலானவர்களின் செயல்...
தமக்கு ஒப்புமை இல்லாதவர்கள், தம்மை எதிர்த்துத் தகுதியற்ற சொற்களைச் சொல்லிய காலத்தும், அதனைக் கேட்டு மனம் புழுங்கிச் சினங்கொள்ள மாட்டார்கள் மேலானவர்கள்.

நேர்த்து நிகர் அல்லார் நீர்அல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார், விழுமியோர்,-ஓர்த்ததனை,
உள்ளத்தான் உள்ளி, உரைத்துராய், ஊர்கேட்பத்
துள்ளித் தூண் முட்டுமாம், கீழ்.
(பாடல் 64 அதிகாரம்: சினம் இன்மை)
தமக்கு ஒப்புமை இல்லாதவர்கள், தம்மை எதிர்த்துத் தகுதியற்ற சொற்களைச் சொல்லிய காலத்தும், அதனைக் கேட்டு மனம் புழுங்கிச் சினங்கொள்ள மாட்டார்கள் மேலானவர்கள்.
கீழ்மக்களோ, அந்தச் சொற்களை நன்றாக ஆராய்ந்து, தம் உள்ளத்தினால் நினைந்து, பலரும் கேட்ப அவர்க்குச் சொல்லி, ஊரெல்லாம் கேட்கும்படி உராய்ந்து துள்ளிக்குதித்துத், தூணிலேயும் போய் முட்டிக் கொள்வார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





