எங்கும் வறட்சி. வெயிலில் வாடி வதங்கிய மக்கள் மழை வேண்டி பிரார்த்தனை செய்வதற்காக ஓரிடத்தில் கூடியிருந்தார்களாம். பிரார்த்தனை செய்வதற்கு ஒரு சிறுவனும் வந்தானாம், கையில் ஒரு குடையுடன். ஒருவர் கேட்டாராம்... "ஏனப்பா வெயில் இப்படி மண்டையைப் பிளக்கிறது, இப்போது எதற்கு உனக்குக் குடை?' என்று. அவன் சொன்னானாம்... ""நாம் பிரார்த்தனை செய்த பிறகு அதைக் கடவுள் செவிமடுத்து, மழை பெய்யும் அல்லவா. அப்போது நான் நனையாமல் வீட்டுக்குச் செல்ல குடை வேண்டுமே'' என்றானாம்.
பிரார்த்தனையின் மீதான நம்பிக்கையை சிறுவன் ஒருவன் வெளிப்படுத்தியதைப் பலரும் இப்படிச் சொல்வார்கள். அதுபோல் ஒரு சம்பவம் கட்டபொம்மனின் வாழ்விலும் நடந்துள்ளதாக நாட்டுப் புறப்பாடல்கள் கூறுகின்றன.
கட்டபொம்மன் செந்தூர் செந்திலாண்டவர் மீது மாறாத பக்தி கொண்டிருந்தான். கோயிலில் உச்சிக்கால பூசை முடிந்ததை தொடர்ச்சியாகக் கட்டப்பட்டிருந்த மணிகளின் ஒலி மூலம் கேட்ட பிறகுதான் உணவு உண்பானாம். அத்தகைய கட்டபொம்மனின் பக்திச் சிறப்பை தன் அடியார் ஒருவரின் மூலம் செந்திலாண்டவர் வெளிப்படுத்தினாராம். செந்திலாண்டவர் சந்நிதியில் இருகண் பார்வை இழந்த கந்தசாமிப் புலவர் தோத்திரப் பாடல்களைப் பாடித் துதித்துவந்தார். அவரது பக்தி சிரத்தையில் மனமிரங்கிய முருகப் பெருமான், அப்புலவருக்கு ஒரு கண் பார்வை அளித்தருளினார். மறுகண் பார்வை குறித்துத் துதித்தபோது, கட்டபொம்மன் வாயிலாகப் பெறுவாய் என்று கனவில் சொன்னாராம்.
இந்தச் செய்தி கட்டபொம்மனை எட்டியது. புலவர் முன் சென்றான் கட்டபொம்மன். ஒரு கையில் உடைவாளுடனும், மறுகையில் பூஜையறையில் வைத்திருந்த கெண்டி தீர்த்தத்துடனும்... செந்திலாண்டவர் பெயர் சொல்லி, கெண்டியில் இருந்து தீர்த்தம் எடுத்துத் தெளித்தவுடன் புலவருக்கு மறுகண்ணிலும் பார்வை வந்துவிட்டது. இப்போது கட்டபொம்மனிடம் கேட்டார் புலவர்... ""நீங்கள் எதற்காக உடைவாளையும் ஏந்தி
வந்தீர்கள்?''. அதற்கு கட்டபொம்மன் சொன்னான்... ""உங்களுக்கு பார்வை வராவிட்டால், என் பூஜையில் களங்கம் இருக்கலாமோ என்று கருதி, என்னை மாய்த்துக் கொள்ளவே உடைவாள் எடுத்து வந்தேன்''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


