/
‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் சிறாா் பாலியல் வன்கொடுமைப் படங்கள் பரவியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு, அந்நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் (படம்), முன்னாள் சிஇஓ லிண்டா யாக்கரினோ ஆகியோருக்கு பிரான்ஸ் அரசு சம்மன் அனுப்பியுள்ளது
‘எக்ஸ்’ தளத்தின் ஏ.ஐ. சேவையான ‘க்ரோக்’, யூதப் படுகொலையை மறுக்கும் வகையிலான கருத்துகளையும், ஆபாசமான ‘டீப்ஃபேக்’ போலிப் படங்களையும் வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதுகுறித்து பிரான்ஸ் சைபா் கிரைம் போலீஸாா் கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய விசாரணையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், பிரான்ஸின் இந்த விசாரணைக்கு உதவ மறுத்துள்ள அமெரிக்கா, அரசியல் நோக்கத்துடன் இக்குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
தொடர்புடையது

தமிழா் மேன்மைக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவா் கருணாநிதி - ராகுல் காந்தி புகழாரம்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றங்கள்: ஸ்ரீதர் வேம்பு







